26. அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில்
இறைவன் வீரட்டேஸ்வரர், யோகீஸ்வரர்
இறைவி ஞானாம்பிகை
தீர்த்தம் சூல தீர்த்தம்
தல விருட்சம் கடுக்காய்
பதிகம் திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருக்குறுக்கை, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'கொருக்கை' என்று அழைக்கப்படுகிறது. வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து மணல்மேடு சென்று அங்கிருந்து பாப்பாகுடி செல்லும் சாலையில் உள்ள பழமண்ணிப்படிக்கரை கோயிலைத் தாண்டி சென்றால் இத்தலம் உள்ளது. திருநீடூருக்கு மேற்கே 3 கி.மீ.
தலச்சிறப்பு

Korukkai Gopuramதீர்க்கவாகு என்னும் முனிவர் சிவபெருமானுக்கு திருமஞ்சனம் செய்ய விரும்பினார். அதனால் ஆகாய கங்கை நீரை வரவழைக்க தமது கையை மேலே உயர்த்தினார். அவ்வாறு உயரத் தூக்கிய கை குறுகியதால் நீர் அவரது கையில் விழுந்தது. அதனால் இத்தலம் 'குறுக்கை' என்று வழங்கப்படுகிறது. கோயிலில் முனிவருக்கு தனி சன்னதி உள்ளது.

சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. மன்மதனை எரித்த தலம். அதனால் இத்தலத்து இறைவன் 'வீரட்டேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

Korukkai Utsavarமூலவர் 'வீரட்டேஸ்வரர்', 'யோகீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், மேற்கு திசை நோக்கி, லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'ஞானாம்பிகை', 'பூர்ணாம்பிகை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

இக்கோயிலில் உள்ள மதன சம்ஹார மூர்த்திக்கு வருடத்திற்கு ஆறுநாள் மட்டுமே, அதாவது சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி தட்சிணாயனம், மாசி மகம், உத்தராயணம் ஆகிய தினங்களில் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. இக்கோயிலில் உள்ள நடராஜர் சபை 'காமாங்க நாசனி சபை' அல்லது 'சம்புவிநோத சபை' என்று அழைக்கப்படுகிறது.

Korukkai Kamanஇக்கோயிலுக்கு சிறிது தூரத்தில் வெள்ளை மணல் உள்ள ஒரு இடம் உள்ளது. அது திருநீறு போல் உள்ளது. இந்த இடத்தில் தான் சிவபெருமான் மன்மதனை எரித்து சாம்பலாக்கியதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்கு எதிரில் சூல தீர்த்தம் உள்ளது.

திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com